Thread Reader
டைனோசர் 🦖

டைனோசர் 🦖
@DinosaurOffcial

Nov 24, 2022
6 tweets
Twitter

கடைசிவரை படிக்கவும்.. காட்டில் ஒரு புலி சிகரெட் பிடித்துக்கொண்டு நின்றிருந்தது. அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு எலி சொன்னது. "சகோதரா, ஏன் இவ்வாறு சிகரெட் பிடித்து உன் வாழ்க்கையை வீணாக்குகிறாய் ? என்னுடன் வா, இந்தக் காடு எவ்வளவு அழகானது என்று காட்டுகிறேன்" என்றது.. 1/6

அதைக் கேட்ட புலி சிகரெட்டை காலில் போட்டு நசுக்கிவிட்டு எலியுடன் நடந்தது. சிறிது தூரம் சென்ற பொழுது அங்கே ஒரு யானை உதட்டின் அடியில் ஹான்ஸ் வைத்துக் கொண்டு நின்றது. எலி யானையிடம் கேட்டது 'சகோதரா நீ ஏன். இப்படி ஹான்ஸ், பான்பராக் எல்லாம் உபயோகித்து உன் வாழ்க்கையை சீரழிக்கிறாய்? 2/6
என்னுடன் வா. இந்தக் காடு எவ்வளவு சுந்தரமானது என்று காட்டுகிறேன்". என்றது இதைக் கேட்ட யானை, ஹான்ஸை எடுத்து எறிந்துவிட்டு எலியுடன் சென்றது. அவ்வாறு மூன்று பேரும் நடந்து போகும் பொழுது வழியில் சிங்க மகாராஜா சாராயம் குடித்துக் கொண்டிருந்தது. இதைக் கண்ட எலி, சிங்கத்திடம் கேட்டது.3/6
"மகாராஜாவே, ஏன் இப்படி உங்களை நீங்களே அழித்துக்கொள்கிறீர்கள்? இந்தக் காட்டின் அழகினை மகாராஜா இதுவரை கண்டதுண்டா? என்னுடன் வாருங்கள், அடியேன் நான் காட்டுகிறேன்” இதைக் கேட்ட சிங்கம் எலியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டது. 4/6
இதைக் கண்டு சப்த நாடியும் ஒடுங்கிப் போன புலியும் யானையும் “மகாராஜாவே, தாங்கள் ஏன் இந்த சமாதானத் தூதுவனை அடித்தீர்கள்?" என சிங்கத்திடம் கேட்டன.. 5/6
"இந்தப் பரதேசி எலி, உத்திரபிரதேசத்தில் திருடிய 581 கிலோ கஞ்சாவை அடிச்சிட்டு இப்படி சொல்லிதான் நேத்து என்னைய இந்த காடு முழுவதும் நடக்க வச்சான். டெய்லி இவனுக்கு இதான் வேலையே" என சிங்கம் சொன்னது.. 6/6
டைனோசர் 🦖

டைனோசர் 🦖

@DinosaurOffcial
உங்கள் கடவுள் உருவாக்கபடுவதற்கு முன் வாழ்ந்தவன். #DravidianStock #குட்கா_இல்லாத_தமிழ்நாடு
Follow on Twitter
Missing some tweets in this thread? Or failed to load images or videos? You can try to .